உருகி வழியுது காதல்...
ஓரத்துக் கரைப்படகு உச்சிவெயில் சுடும்பொழுது உலகையே மறந்தபடி சிரித்திருக்கும் இரு இளசு கடலோரம் தொட்டுத் தொடுவானம் வரைக்குமாய் பொங்கிப் பரவும் இது காதலில் ஒரு தினுசு அன்றாடக் கூலியான அப்பாவை ஏமாற்றி அகப்பட்ட காசு இங்கே உருகுது ஐஸ்கிரீமாய்... பத்துப்பத்திரம் தேய்த்துப் பாடுபட்டுப் படிக்கவைக்கும் அன்னையின் நம்பிக்கை அனல்பட்ட பனிநீராய்... விழிகளில் தேக்கிய காதலின் மயக்கத்தால் கல்லூரிப் பாடங்கள் கனக்குது பெரும்சுமையாய்... இன்று, உணர்ச்சிகளின் பெருக்கத்தில் கடமைகள் தொலைத்துவிட்டு விளையாட்டாய் வரும் காதல் வினையாகிவிடும் வாழ்வில்...